மகா சக்தி துணை
எங்களைப் பற்றி
மகா சக்தி துணை
நமது சம்பாலா எந்திரலோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா மதத்தினரும் சமயங்களை கடந்து வருகை தந்து இறைவனின் அருளை பெறுகின்றனர். முன்பு கூறியது போல் இறைவன் ஒருவனே அவரை நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே காட்சி அளிக்கிறார் மகாசக்தி.
மகா சக்தி கூறியதாக குருவின் குரு கூறுகையில், முக்கனிகள் சேர்ந்த இடத்தின் நான் இருப்பேன் [ அதாவது மா, பலா, வாழை ஆகிய மூன்று விருட்சங்கள் உள்ள இடத்தில் நான் இருப்பேன் ]. பல இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை இறுதியாக இந்த இடத்தில் தான் மூன்று விருட்சங்களும் இருந்தன அதே போல் பலநூறு வருடங்களாக இங்கு முனீஸ்வரரை வணங்கி வருகின்றனர், இவ்விடத்தில் தண்ணீர் மிக அருமையாக உள்ளது, அதே இடத்தில் சிவவாக்கியர் ஜீவசமாதி உள்ளது. இந்த இடத்தில் தான் இப்போது நமது சம்பாலா எந்திர லோகம் அமைந்துள்ளது.
